Friday, December 10, 2010

அவன் அவள் அல்வா

எனக்கு கதையும் எழுத வரல , கவிதையும் எழுத வரல அதான் ரெண்டையும் கலந்துகட்டி எழுதலாம்னு ஒரு சிறுமுயற்சி ,


கதை இதுதான் ஒரு பையன் ஒரு பொண்ண சின்சியரா காதலிக்கிறான் , ஆனா அந்த பொண்ணு அவன ஜஸ்ட் ஒரு டைம் பாஸ்காகவும் , அவன் காசுல என்ஜாய் பண்றதுக்காகவும் காதலிக்குற மாதிரி நடிகுறா, இதுதான் கதை ( ஐ கதை எழுதிட்டேன் ) இப்ப அந்த காதலன் அவள் காதலியை பார்த்து கவிதை நடைல (?) வர்ணிக்க , அதற்கு அந்த காதலியும் மனதிற்குள் கவிதை (?) நடைலயே பதில் சொல்றாங்க .. இதில் காதலி சொல்லும் அனைத்தும் அவள் மனதிற்குள் சொல்லி கொள்வது ..


அவன் : 
அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
காலையில் சூரியனும் 
மாலையில் சந்திரனும் 
உன்முகத்தை மட்டும் பார்பதாலா ?


அவள் ( மனதிற்குள் ) :

அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
நீ ஒரு டுயுப் லைட் என்பதாலா ?

அவன் :
அன்பே , நீ நடக்கும் சாலையெங்கும் 
மலர்களை தூவி வைப்பேன் 
உன் பாதத்திற்கு வலிக்காமல் இருக்க!

அவள் ( மனதிற்குள் ):
சாலையெங்கும் மலர்கள் வேண்டாம் 
அன்பே , தினம் ஒரு முழம் போதும் 
எனக்கு பத்துருபாய் மிச்சம் 

அவன் :
அன்பே , உன் சிரிப்பில் இருந்து 
சில்லறையாய் சிதறுகிறதே 
அது எப்படி ?

அவள் :
உன் பாக்கெட்லிருந்து பணம் சிதறும்வரை 
என் சிரிப்பிலிருந்தும் சில்லறை சிதறும் 

அவன் :
நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறனே
உனக்கு எப்போதும் விக்கல் வருகிறதா ?

அவள் :
நீ சென்றவுடன் கணேஷ் வந்து விடுவதால் 
உன் ஞாபகம்கூட வருவதில்லை அன்பே !

அவன் :
எப்போதும் நீ எனக்கு மட்டும் அழகாக தெரிகிறாயே    
எப்படி ?

அவள் : 
என் மேக் அப் கலையும்வரை எல்லோர்க்கும் அழகாத்தான் தெரிவேன் 
அப்படி !


அவன் : 
அன்பே உனக்காக நான் உயிரையும் தருவேன் 
எனக்காக நீ என்ன தருவாய் ?


அவள் :
உன்னிடம் தருவதற்கு அல்வாவை தவிர 
வேறொன்றும் இல்லை அன்பே ..


அவன் :
அன்பே , நமது  திருமணம் எப்போது நடக்கும் ?


அவள் :
எப்போதும் போல்  இரவில் உன் கனவில் மட்டும்தான் அன்பே ...


Moral of the Story : அவன் போன்ற காதலனும் , அவள் போன்ற காதலியும் இருக்கும்வரை , அல்வா கடைகளுக்கு அழிவில்லை .






            

போஸ்டர் குறும்பட விமர்சனம்

நான் வலைத்தளம் ஆரம்பிக்க காரணமே அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள்தான் , அது எப்படி என்பது பல தடவை பல பேரிடம் சொல்லிருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம் . 


அவரை பற்றி தெரிந்த அனைவருக்கும் கண்டிப்பாக தெரியும் அவருடைய திரைப்பட ஆர்வம் , ஒரு திரைப்பட இயக்குனராக தீவிரமாக முயற்சி செய்து வரும் அவர் தற்பொழுது ஒரு எழுத்தாளராகவும் வெற்றி கண்டுள்ளார். ஒரு காலத்தில் அவரது விமர்சனத்தை படித்துவிட்டு அதற்குபிறகுதான் படம் பார்க்கவே செல்வேன், ஆனால் பலதடவை அவர் நன்றாக பாராட்டிய படம் எனக்கு பிடிக்காது அல்லது எனக்கு மிகவும் பிடித்த படம் அவருக்கு பிடிக்காது விமர்சித்திருப்பார் , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை ... 


நான் இரண்டு காரணங்களுகாக  சங்கர் அண்ணனின் படத்தை மிகவும் எதிர்பார்கிறேன் , ஒன்று, மூன்று வருடங்களாக அண்ணனின் ப்ளாக் படித்து கொண்டிருக்கிறேன் ஆகையால் அவரது இயக்குனர் கனவை பற்றி நன்றாக தெரியும், அது நிறைவேற வேண்டும் என்ற ஆசை, மற்றொன்று எல்லாருடைய படத்தையும் விமர்சிக்கும் இவரது படம் எப்படி இருக்கும் என்பதை காணும் ஆவல்.. 


அண்ணன் ஏற்கனவே குறும்படத்தை இயக்கி இருந்தாலும் அதை நான் கண்டதில்லை , அவரது வலைத்தளத்தில் அவர் கதை , திரைகதை அமைத்த போஸ்டர் குறும்படம் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு  ஆக இருப்பதாக   அறிவித்திருந்தார் , ஏற்கனவே அந்த நிகழ்ச்சியின் போலீஸ் சுற்றை கண்டிருந்ததால் , அண்ணனின் கைவண்ணத்தை காணும் ஆவல் ஏற்படிருந்தது .. ஆனால் ஆடிட்டிங் வேலை அதிகமாக இருந்ததால் சென்ற ஞாயிற்று கிழமை அலுவலகமே கெதியாக இருந்தேன் ஆகையால் அதை காண முடியவில்லை , நேற்று இரவு அதே நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தார்கள் , நான் பாதியில் இருந்துதான் நிகழ்ச்சியை பார்த்தேன் ஆகையால் கடைசி மூன்று படங்களைத்தான் பார்க்க முடிந்தது அதில் ஒன்று போஸ்டர்.


படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள் ஆனாலும் யாரேனும் பார்க்காமல் இருந்தால் அவர்களுக்காக.. படத்தின் கதை இதுதான் ஒரு விபச்சாரம் செய்யும் சாந்தி என்ற பெண்ணை பற்றி ஒரு தெருவில் போஸ்டர் ஓட்ட பட்டிருகிறது , எங்கே விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடுமோ என்று இரவோடு இரவாக அந்த ஏரியா காவல்துறையினர் அந்த போஸ்டரை கிழித்து எறிகின்றனர், அந்த சாந்தியை உடனடியாக பிடிக்க சொல்லி அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு அவரது மேலதிகாரிகள் நெருக்கடி அளிக்கின்றனர், மறுநாள் காலை சாந்தி என்ற விபச்சாரம் செய்யும் பெண் அவளது கையாளிடம் புதுசா ரெண்டு பசங்க (பொண்ணுங்க ) வந்துருகாங்க வழக்கமா வர அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டியிடம் சொல்லு ராசியான ஆளுங்கன்னு சொல்கிறாள் , அவனும் அந்த எக்ஸ்போர்ட் ஆளுக்கு போன் செய்ய நம்பரை தேடி போன் செய்கிறான் அந்த நம்பர் 76 என முடிகிறது ஆனால் அவனோ தவறுதலாக 70 என கால் செய்து விடுகிறான், அது அந்த ஏரியா போலிசின் நம்பர் , போன் செய்தவன் அவர்களது அட்ரசையும் போலீசிடம் சொல்ல போலீஸ் அந்த சாந்தியை பிடிக்கிறது. இரவு போஸ்டர் ஒட்டிருந்த இடத்திற்கு இருவர் வந்து அந்த போஸ்டர்களை தேடுகின்றனர் , அதில் ஒருவன் போன் செய்து சொல்கிறான் , அண்ணே நேத்து சீரியலுக்காக ஒட்டிருந்த போஸ்டர் ஷூட்டிங் நின்னதால அப்படியே விட்டு போனோம்ல அத காணோம்னே எவனோ கிழிச்சிட்டாய்ங்கனே னு சொல்றான்.. ஆக ஷூடிங்க்காக ஒட்டபட்ட போஸ்டர தவறா புஞ்சிகிட்ட போலீஸ் உண்மையிலே சாந்திங்கிற விபசாரியையும் பிடிச்சிட்டாங்க .. 


இதுதான் நான் படத்த பார்த்து புரிஞ்சிகிட்ட அளவில் படத்தோட கதை . படத்தோட கதையிலேயே ஹுயுமர் இருந்தாலும் அதை சொன்ன விதம் அருமை .. பொதுவா போலீஸ் ஸ்டோரினு எடுத்துகிட்டா ரௌடிசம், என்கவுன்டர் இதுதான் பிரதானமா இருக்கும் அதையேதான் நான் பார்த்த அடுத்த ரெண்டு படத்திலையும் கொடுதிருதாங்க ஆனா இந்த படம் அந்த எந்த விஷயத்திலும் சிக்காம அழகா ரசிக்கிற மாதிரி இருக்கு .. 


படத்துல நடிச்ச எல்லோரும் ரொம்ப இயல்பான நடிப்ப வெளிபடுதிருந்தாங்க எனக்கு அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , போன்ன அட்டென்ட் பண்ணற அந்த காண்ஸ்டேபிள் அப்புறம் அந்த சாந்தியின் கையாள் ( போன் செய்பவர் ) இவர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது , படத்தின் மைனஸ்னா நான் இதற்கு அடுத்து பார்த்த ரெண்டு படம் கரனம் தப்பினால், அச்சம் தவிர் இந்த ரெண்டு படத்தோட ஒப்பிடும்போது making style, edititing, music இதெல்லாம் நம்ம படத்துல கொஞ்சம் low தான் ஆனாலும் நம்ம படத்தின் கதைக்கு செய்ய முடிந்த அளவிற்கு சிறப்பாகவே செய்துள்ளார்கள் , என்னதான் பெரிய நட்சத்திர அந்தஸ்து , பெரிய டெக்னிசியன்ஸ் இருந்தாலும் அசல் , சுறா , இப்போ உத்தமபுத்திரன் போன்ற படங்களை விட களவானி , மைனா போன்ற படங்கள் மனதை கவருதோ அந்த மாதிரி இந்த ரெண்டு படங்களை விட நம்ம படம் தூள் .. 


அடுத்த சின்ன மைனஸ் அந்த சாந்தி சொல்றாங்க அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டிய வர சொல்லு ராசியான ஆளுங்கனு, ஏற்கனவே வந்துட்டு போயிட்டு இருகிறவங்களுக்கு எதுக்கு மறுபடியும் அவர் அட்ரெஸ் தரனும் ( ஒரு வேள வீடு மாத்திடான்களோ )  எது எப்படியோ எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்துச்சு , நடுவர்களுக்கும் புடிச்சிருந்துச்சு சிறந்த படம்னு பெயரும்  கிடைச்சாச்சு, போஸ்டர் பட டீம்க்கு வாழ்த்துக்கள் .. மொத்தத்தில் Poster - Blaster.

Wednesday, December 8, 2010

திரை நட்சத்திரங்களின் கலக்கல் கவிதைகள்

நம்ம திரையுலக பிரபலங்கள் திரைபடத்தில் சொன்ன கவிதைகளின் சிறு தொகுப்பு உங்களுக்காக...


ஜனங்களின் கலைஞன் விவேக் ...





காதல் 
காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு 
சைஸ் சரியா இருந்தா 
யாரு வேணாலும் மாட்டிக்கலாம்!


ஆட்டோ 

ஆட்டோவே நீ எப்போது வருவாய் 
உன்னிடம் தரும் அளவிற்கு 
எங்களிடம் இல்லை வருவாய் ! 

அடுத்து நம்ம மிர்ச்சி சிவா





காதல் நாய் 

மரத்துல இருக்குது காயி
மரத்துல இருக்குது காயி
தூங்க தேவை பாயி  
தூங்க தேவை பாயி
நீ ம் னு சொன்னா இந்த சிவா 
உன் காலடி நாயி செல்வி நாயி!

இன்னொரு கவிதை(?)

மவுன் ரோட்டுல அன்னா சாலை 
ரஜினிகாந்த்  முரட்டு காளை......

நம்ம பார்த்திபன் ...


ஒரு அழகான பொண்ணு ஸ்வீட் சாப்பிடுற அழக (அது அழகு ??) நம்ம பார்த்திபன் கவிதையாய் சொல்லறார் .

ஒரு, ஸ்வீட் ஸ்டால்லே 
ஸ்வீட் சாப்பிடுகிறதே ...!

டேய் டேய் இதல்லாம் நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா 

கடைசியா நம்ம கவுண்டமணி அண்ணே , ரெண்டே வரில அவரோட அக்கா மகளுக்காக எழுதின கவிதை ..





அடி அக்கா மகளே இந்து ,
யே வக்கா மகளே இந்து ...

நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணேன், அவ என்ன பார்க்க நான் அவள பார்க்கனு நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு , ஒருநாள் அவளபத்தி ஒரு கவிதை எழுதி அவ கிளாஸ் பையன்கிட்ட கொடுத்து அனுப்புனேன் , அதுல இருந்து அவ என்ன பாக்குறதையே நிறுத்திட்டா , அப்புறம் என்னோட 34 லவ் மாதிரியே இதுவும் பெயிலா போச்சு ( இது என்னடா பரிட்சையா பெயிலா போறதுக்கு ) அந்த கவிதை இதுதான் , அவ பெயர் பாரதி ..

பாரதி , அழகான பெயர் ,
நீ ஏன் இவ்வளவு ஒல்லியாக இருகிறாய் ?
பேரு வைத்த உன் வீட்டில் யாரும் 
உனக்கு சோறு வைக்கவில்லையா ?

இவ்வளவு அழகான கவிதைய (?) அவளுக்கு பிடிக்காம போயிடிச்சே ..:( 


அவ அப்படி பன்ன மாட்டா

ஆபீஸ்ல ISO ஆடிட்டிங் அது இதுன்னு ஏகபட்ட வேலை எல்லாம் ஒரு வழியா முடிஞ்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகாலம்னு நான் அப்புறம் என்னோட சீனியர்ஸ் மூனு பேரும் பார்க்கு போனோம் மொத ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பன்னிட்டு வெயிட் பண்ணிடிருக்கும்போது எனக்கு ஒரு யோசனை வந்துச்சு நம்ம  ப்ளாக்ல எழுத சரக்கு இல்லாம கஷ்டபடறோம் , இந்த மாதிரி குடிமகன்கள் இருக்குற எடத்துல கண்டிப்பா நமக்கு நிறைய மேட்டர் கடைக்கும் அவனவன் குடிச்சுட்டு போதைல உண்மைய பேசுவாங்க அத அப்படியே பதிவுல எழுதி ஹிட்ஸ்ச அள்ளிடனும்னு முடிவுபன்னேன் . சரக்கு அடிக்குற இடத்திலையும் பதிவுக்கு சரக்கு சேர்கிற என்னோட ஆர்வத்த நீங்க பாராட்டியே ஆகனும் (என்ன பண்றது கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு ) . அப்படியே ஒரு பீர லைட்டா குடிச்சிட்டே பக்கத்து கேபின்ல என்ன பேசுராங்கனு கேட்க ஆரம்பிச்சேன் , அங்கே .... மச்சி நீ என்ன நம்புறியா இல்லையா ?., என்னடா மச்சி இப்படி கேட்குற சத்தியமா நம்புறேண்டா .. அப்படினா கேளு அவ அப்படி பன்னிருக்க மாட்டா ... ஆஹா ஒரு பொன்ன பத்தி பேசுறாய்ங்கா அப்படினா நாம பதிவுபோட கண்டிப்பா ஒரு மேட்டர் சிக்கிருச்சு ( இது நான் )..


அவன் : இல்ல மச்சி நான் அவளோட எத்தன வருசமா பழகிருக்கேன் எனக்கு தெரியும்டா அவ பன்னிருப்பா


இவன் : எனக்கு நம்பிக்கை இல்லடா அவ பன்னிருக்க மாட்டா ..


அவன் : என்னடா என்ன நம்ப மாட்டியா ? அவ பன்னிருபாடா


இவன் : அவ போய் சே சே இருக்காது


அவன் : அவதாண்டா பன்னா எவ்வளவு வேணாலும் பெட் கட்டுவேன்


நான் ( மனதிற்குள் ) டேய் என்னதாண்ட அவ பன்னா சொல்லி தொலைங்கடா சீக்கிரம் இன்னும் எனக்கு பதிவு போட மேட்டர் கடைக்கலடா.


இவன் : மச்சி நீ எனக்கு ஒரு பீர் வாங்கிகொடுதேனு நான் எது சொன்னாலும் நம்புவேணு பார்த்தியா போடா


அவன் : அப்படிலாம் இல்ல மச்சி அவதாண்டா பன்னா , என்ன நம்பு .


இவன் : அவ பன்னிருக்க மாட்டா  


நான் ( மனதிற்குள் ) டேய் அவ என்னத்த பன்னாலோ இல்லையோ இனிநான் ஒன்னு பன்ன மாட்டேன்டா, இனி எவன் குடிச்சுட்டு பேசுனாலும் நான் ஒட்டு கேட்க மாட்டேன்டா ..ஒரு பீர் குடிக்கலாம்னு வந்தவன ரெண்டு பீர் குடிக்க வைச்சுட்டாங்க பாவிங்க .. கடைசியா கிளம்பும்போது ஒரு வழியா மேட்டர்க்கு வந்துட்டாய்ங்களானு பார்த்தேன் ...


அவன் : மச்சி உன் தல மேல சத்தியம் அவதாண்டா பன்னா 


இவன் : மச்சி உன் தளபதி மேல சத்தியம் அவ பண்ணிருக்க மாட்டா 


அட பாவிங்களா அவ பன்னதுக்கு இவுங்க ரெண்டு பேரும் என்னடா பாவம் பன்னாயிங்க .. சத்தியமா இந்த பாருக்கு இனிமேல் குடிக்க வர மாட்டேன்டா .. 


நண்பர்களே நானும் ஒழுங்கா ஒரு பதிவு எழுதனும்னு ஆசைதான் என்னத்த பன்ன ???

Monday, December 6, 2010

என்னை அழ வைத்த டிவி நிகழ்ச்சி

எச்சரிக்கை : தப்பி தவறி கூட பெண்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம் ..




பல பேர் சேர்ந்து பொது மாத்து போட்டாலும் அசால்டா அழுகாம போற ஆள் நான் ஆனா என்னையே ஒரு டிவி நிகழ்ச்சி அழுக வச்சுடுச்சு ... ஆனா இது நடந்தது நான் பத்தாவது படிக்கும்போது.. பொதுவா ஆண்கள் எல்லாத்துக்கும்  சுய இன்ப பழக்கம் இருக்கத்தான் செய்யும் . நான் பத்தாவது படிச்சுட்டு இருக்கும்போது வயசுக்கு வந்தேன் , யாரும் தப்பா நனைச்சுகாதிங்க that means எனக்கு அப்போதான் அந்த மேட்டர்லாம் கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சுச்சு ..சரி என்னதான் அதுல இருக்குனு தெரிஞ்சிக்கலாம்னு ஆரம்பிச்சு ஒரு ஒன்னற மாசம் அதுபாட்டுக்கு நடந்துட்டு இருந்துச்சு அப்போ ஒருநாள் நான் டிவி பார்த்துட்டு இருந்தேன் , ஒவ்வொரு சேனலா மாத்திட்டு இருக்கும்போது ஒரு சேனல்ல ஒருத்தர் சட்டை போடாம உட்கார்ந்து ஏதோ உரல்ல வச்சு இடிச்சுட்டு இருந்தார் , என்னடா இதுன்னு ஆர்வமா பார்த்தேன் கொஞ்ச நேரத்துல அதே மாதிரி நிறைய போட்டோ மாறி மாறி வந்துச்சு .. அப்புறமா ஒருத்தர் வந்து பேச அரம்பிசாரு அவர் முடிலாம் கருப்பா இருக்க கிர்தா மட்டும் வெள்ளையா இருந்துச்சு , ஆளு வித்தியாசமா இருக்காரே அப்படி என்னதான் சொல்ல போறார்னு பார்க்கலாமேன்னு பார்த்தேன் .. இனி அவர் , ஏன் எதுக்கு ஏன்டா ? இந்த வயசுலேயே இந்த _______ பழக்கத்த பழகிட்டு நியும் கெட்டு பின்னாடி உன்ன நம்பி வரபோற பொண்ணோட வாழ்க்கையையும் சேர்த்து கேடுகீறிங்க ? தயவுசெஞ்சு சொல்றேன் நீங்கலாம் கல்யாணமே பண்ணிக்காதீங்க சே... இத பார்த்த உடனே என் கன்னு ஆட்டோமேட்டிக்கா கலங்கிடிச்சு.. அய்யய்யோ இது இவ்வளவு பெரிய தப்பா இது தெரியாம ஒன்னற மாசமா பன்னிட்டு இருக்கோமே ... அப்போ அவருக்கு ஒரு போன் வருது .. ம் சொல்லு என்னது அடுத்த மாசம் கல்யாணமா ? நீயெல்லாம் ஏன்டா கல்யாணம் பண்ணிக்க போற , உனக்கு அறிவு இருக்கா இல்லையா அந்த பொண்ணு என்ன பாவம் பன்னா அவள கல்யாணம்பன்னி உன்னால என்ன சுகத்த கொடுக்க முடியும் மொத நி போன்ன வை ... நான் அழுதே விட்டேன் ஏன்னா நான் அப்போதான் அனிதானு ஒரு பொன்ன கரெக்ட் பன்னிட்டு இருந்தேன் .. அப்படியே அவர் அவரோட டென்ஷன்ன கட்டுபடுத்திகிற மாதிரி என்என்னமோ பன்னி திரும்பவும் பேச அரம்பிசாரு .. நான் சொல்லறதே கேளுங்க ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்ன உங்க தாத்தாவா நனைச்சிகுங்க சேலத்துக்கு வாங்க என்ன வந்து பாருங்க நாங்க பழங்காலத்து ஓலை சுவடிகளை வச்சு பல மருந்து தயாரிச்சிருக்கோம் வாங்க நாங்க இருக்கோம்னு வாசன் ஐ கேர் மாதிரி சொன்னாரு, இத கேட்ட உடனேதான் எனக்கு உயிரே வந்துச்சு அப்போ நான் நினைச்சிகிட்டேன் உண்டியல ஒரு 120 ருபா இருக்கு எப்படியோ இன்னும் ஒரு 30 ருபா சேர்த்து யாருக்கும் தெரியாம சேலத்துக்குபோய் இந்த டாக்டர் தாத்தாவ பார்த்துடணும்னு முடிவு பண்ணேன் .. அப்பறம் அந்த பழகத்தா அதோட விட்டாச்சு .. அப்பறம் காலேஜ் சேர்ந்து விவரம் தெரிஞ்ச அப்புறம்தான் தெரிஞ்சிச்சு அவர் சொன்னதெல்லாம்  பொய்னு.   இப்படித்தான் சின்ன வயசுல டிவிய பார்த்து misunderstand ஆல குழப்பம் ஆயிடுச்சு. நான் பரவாயில்லை என் நண்பர் ஒருத்தர் சின்ன வயசா இரும்போது டிவி பார்த்துட்டு இருந்துருக்காரு அப்போ நம்ம அஜித் நடிச்ச உயிரோடு உயிராக னு ஒரு படம் ஓடிட்டு இருந்துருக்கு அதுல அஜித் ஹீரோயின் கன்னத்துல முத்தம் கொடுத்துருக்காரு அத இவர் பார்த்துட்டு இருக்கும்போது இவர் பக்கத்து வீட்டு பசங்க இவர விளையாட கூப்டாங்கனு இவர் போயிட்டாரு போனவர் கரெக்டா படத்தோட கிளைமாக்ஸ்லதான் வந்துருகாரு அப்போ ஹீரோயின் பிரசவ வழில துடிச்சுருகாங்க பக்கத்துல அஜித் பதறிட்டு இருக்காரு இத பார்த்த உடனே நம்ம நண்பர் என்ன நனைச்சிட்டாரு பொண்ணுங்களுக்கு கன்னத்துல முத்தம் கொடுத்துட்டா அவங்களுக்கு குழந்தை பிறந்துடும்னு நினைச்சிட்டார், அப்பவே அந்த பிஞ்சு மனசுல இது நஞ்சா விழுந்துடிச்சு, அதுக்கு அப்புறம் அவரு 9  வது படிக்கும்போது ஒரு பொன்ன லவ் பன்னாரு ஆனா அந்த மேட்டர மனசுல வட்சிட்டு அந்த பொண்ணுக்கு ஒரு முத்தம்கூட கொடுக்கல, என்னடா இவன் இப்படி நம்மள காய விடறானேன்னு அந்த பொண்ணு இவர divorce பண்ணிடுச்சு இல்ல இல்ல கட் பண்ணிடுச்சு , இப்படியே இவருக்கு அஞ்சாறு லவ் போனதுக்குப்புறம்தான் உண்மையே தெரிஞ்சிச்சாம்... அது அப்படி இல்லைன்னு .

Thursday, December 2, 2010

Wikileaks தெரியும் அது என்ன venkileaks? - அதிர்ச்சி தகவல்

பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் :
நீங்கள் படித்து கொண்டிருக்கும் இந்த வலைத்தளம் உலகிலேயே நம்பர் ஒன் தமிழ் வலைத்தளம் என IRDCAF ஆல் அங்கீகரிக்க பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ( IRDCAF னா என்னான்னு கேட்றாதீங்க ஏனா எனக்கே தெரியாது ) எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத்தான்.


உலக நாடுகளின் குறிப்பா அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருது wikileaks என்ற இணையத்தளம்.அதே மாதிரி பல பதிவர்களோட வெளிவராத ரகசியங்களை விரைவில் வெளியிட்டு பரபரப்பை பதிவுலகில் ஏற்படுத்த வருகிறது venkyleaks என்ற இணையத்தளம் . அதை பற்றிய ஒரு சிறு பார்வை .


அந்த தளம் முதல் கட்டமாக வெளியிட போகும் சில பதிவர்களின் ரகசியங்கள் நமது காதுக்கு எட்டின, அவை ...



1. Wikileaks இணையத்தளம் அமெரிக்காவின் பல கேபிள்களை வெளியிட்டு கொண்டிருகின்றன அதேபோல் விரைவில் இந்தியாவின் பல கேபிள்களை வெளியிட போகிறதாம், இந்த இணையதளத்திற்கு இதுபோன்ற கேபிள்களை சப்ளே செய்வது வெறும் யாரும் அல்ல , சொன்னால் நம்ப மாட்டிர்கள் அது பிரபல பதிவர் அண்ணன் கேபிள் சங்கர்தான்...அப்போ இவர்தான் weapon suppliernu சொல்லுங்க .. 


Cable சங்கர்


2. கணக்கில் வராத பல கோடி சொத்துகளுக்கு சொந்தகாரர் இந்த பதிவர் , எங்கே விஷயம் வெளிய தெரிஞ்சா பிரச்சனை ஆயிடுமோன்னு இவரு இவருக்கு வச்சுகிட்ட பேரு வெறும்பய ... அட கொடுமையே ...




3. இந்த பதிவர் மேல Google கொலைவெறில இருக்காம் , காரனம் இதனாம் இவரு தன்னோட வலைதளத்துக்கு வச்சுருக்குற பேரு பாலாவின் பக்கங்கள் ... ஆன இவரு எழுதுறதெல்லாம் Google ஓட blogger.com பக்கங்கள் .. விரைவில் Google இவர் மேல கேஸ் போடலாம்னு எதிர்பார்க்கபடுகிறது ... அப்போ முன் ஜாமீன் வாங்கிடுங்க ...


4. புது வீடு கட்டிருகேன்னு தன்னோட வலைதளத்தை அறிவிப்பு செஞ்ச பதிவர் வென் புரவிக்கு திருப்பூர்ல ஒரு சின்ன வீடு இருக்காம் .... இப்பலாம் யாரையும் நம்ப முடியல .. 




5. இவர் ரொம்ப தைரியமான பதிவர் அவர் பெயர முழுசா சொல்ல மாட்டாரு அவர சுருக்கமா SK னு கூப்பிடுவாங்க அதோட உண்மையான அர்த்தம் S for சந்தனம் K for கடத்தல் .... எவ்வளவு தைரியம் .




6. அடுத்து எங்க ஊரு காரரு அறியாமையே ஆனந்தம்னு சொல்லி தன் பெயரை கரூர் கிறுக்கன்னு  வட்சிகிட்டவர் இவர்மேல ஆள் கடத்தல் கற்பழிப்புனு பல கேஸ் இருக்குனா நீங்க நம்புவீங்களா ஆன அதான் உண்மை ... 




அப்ப பதிவுலகில் யாருமே ஒழுங்கா இல்லையா ? அப்படினு ஒரு சந்தேகம் இந்நேரம் உங்களுக்கு வந்திருக்கும் இதே சந்தேகம்தான் Scotland Yard போலீஸ்களுக்கும் வந்துச்சு உடனடியா அவங்க உலகம் முழுவதும் தேடி கடைசியா தமிழ்நாட்டு போலீஸ்கிட்ட கலந்து ஆலோசிச்சு எடுத்த முடிவு .... இந்த வெங்கட் சரண்தான் அந்த நல்லவன்கிறதுதான் ... இத படிச்ச உடனே சிலர் டென்ஷன் ஆகலாம் ஆனா சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் ..


ok friends மேல சொன்ன எல்லாம் மேட்டரும் கற்பனைதான் யாரும் அந்த பதிவர்கள்கிட்ட போட்டு கொடுதுராதீங்க நான் ஏன் சொல்லறேனா ஏற்கனவே நமக்கும் அந்த பதிவர்களுக்கும் வாய்கால் தகறாரு இருக்கு இதுல இது வேறையா...



Wednesday, December 1, 2010

ஏகன் vs சுறா - ஒரு மொக்க chatting

எனக்கு பிடித்த பொழுதுபோக்கு நண்பர்களுடன் chat செய்வது அதிலும் சில நண்பர்களுடன் chat செய்யும்போது பயங்கரமாக கலாய்த்துகொள்வோம் , அப்படிப்பட்ட நண்பர்களுள் ஒருவன்தான் ரங்கபிரபு, நேற்று அவனோடு chat செய்தேன் , அவன் ஒரு விஜய் ரசிகன், அதுவே போதுமே கலாய்க்க....









venkat saran is online


அவன் : இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் my dear friend. My best wishes for all of ur movements


நான் : வாஞ்சிநாதன் நகர் நற்பணி மன்றம் சார்பாக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் , மிக்க நன்றி .


அவன் : வாஞ்சி நற்பணி மன்ற தலைவரே நீங்கதானே தளபதி 


நான் : நீ இப்படிலாம் சொன்னா மட்டும் நான் அரசியலுக்கு வந்துடுவேன்னு நனைச்சியா , நான் இமய மலைக்கு  போனும் .


அவன் : நான் எப்போ அப்படி சொனேன் ? நீயா imagine பண்ணிக்காத , நான் விஜயவச்சு சொன்னா நீ தலைவர் ரேஞ்சுக்கு போய்டியா ?


நான் : விடுடா சும்மா chat லயாவது சொல்லிக்கலாம்னு பார்த்தா....


அவன் : ஆசைய பாரு, போங்க தம்பி அப்புறம் நாங்கலாம் எங்க போறது ?


நான் : என்ன பா தளபதி மட்டும் என்ன சாதாரண ஆளா? ஜெயலலிதா, விஜயகாந்த் , விஜய் மூனு பேரும் கூட்டணி வச்சு வரபோற தேர்தல சந்திக்க போறங்களாம் , இப்போதான் பஸ் ஸ்டாண்ட்ல நக்கீரன் விளம்பரத்துல பார்த்தேன் .


அவன் : அப்போ எங்க தளபதி கண்டிப்பா அடுத்த MLA ஆகபோரார்னு சொல்லுங்க , Dr. Ilayathalapathi Vijay MLA va ?


நான் : அமாம் MLA தான் Member Of Lorry Drivers Association அவன் நடிக்கற லட்சணத்துக்கு கண்டிப்பா கொஞ்ச நாள்ல சினிமாவ விட்டே துரத்திடுவாங்க , அப்புறம் அவன் லாரி ஓட்டி தான் பொழப்பு நடத்தனும் ...


அவன் : சரி அத விடு கண்டிப்பா நாம இந்தியன் பார்லிமெண்ட்ல இடம் புடிச்சே ஆகனும்.


நான் : கண்டிப்பா நமக்காகவே ரெண்டு சீட்டு எப்பவும் பார்லிமெண்ட்ல காத்திருக்கும் 


அவன் : ok thats good   , நாம ரெண்டு பேரும் சேர்ந்து கரூர் மக்களுக்காக பார்லில குரல் கொடுப்போம் .


நான் : நமக்கு கொடுக்கறது Audience சீட் அங்க இருந்து குரல் கொடுத்தா போலீஸ்ச விட்டு வெளிய துரத்திடுவாங்க ... சரி உங்க தளபதி MLA மேட்டர்க்கு வா..





அவன் : யோ அப்படிலாம் யாரையும் கேவலமா பேசாதையா , தளபதிக்காக உயிரையே கொடுக்குற கூட்டம் எங்களுது பா..


நான் : நீ உயிரைலாம் கொடுக்க வேண்டாம் just உங்க தளபதியோட சுறா படத்த continue வா ரெண்டு show பாரு போதும் , உயிர நீ கொடுக்க வேண்டாம் அதுவா போய்டும் .


அவன் : ரெண்டு தடவ என்ன ஆயிரம் தடவ பார்போம் ..


நான் : மூணாவது தடவ நீ பார்க்கும்போதே செத்துடுவ அப்புறம் எங்க ஆயிரம் தடவ பார்க்குறது ?


அவன் : மனதில் உறுதி வேண்டும் 


நான் : அதுக்கு மொத உயிர் வேண்டும்


அவன் : அந்த படத்துக்கு என்னையா ? நாங்கலாம் ஏகனேயே ரெண்டு தடவ பார்த்துட்டு உயிரோட இருக்கோம் ..


நான் : தல படத்த தப்பா பேசாத அந்த ஏகன் படத்த 16 மொழிகள்ள டப் பன்ன பேச்சிவார்த்தை நடந்துட்டு இருக்கு தெரியுமா ?


அவன் : தமிழ் நாட்டு மக்கள கொன்னது பத்தாதா ? எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த நாட்டு மக்களுக்கு ..


நான் : தலய ஓட்ட ஆரம்பிச்சுட்டானே என்ன பண்ணலாம் ........?


venkat saran is offline 








இந்த வருடம் ஊழல் வருடம்









இந்த வருடம் ஊழல்களின் வருடம் போல இருக்கு , எனக்கு விவரம் தெரிஞ்சு இதனை ஊழல் ஒரே ஆண்டுல வெளிவருவது ( சினிமாவாட இது  வெளிவரதுக்கு ) இதுதான் முதல் முறை , ஆனா எனக்கு ஒன்னுதான் புரியல எல்லாமே பன்னது பெரிய பெரிய ஊழல்தான் ஆனா பெருசா ஏதும் நடவடிக்கை எடுத்தமாதிரி தெரியல , யாராவது ஒருத்தர ஊழல்ல பிடிக்குறாங்க உடனே ஒரு வாரத்துக்கு அவரை பத்தின மேட்டர் இல்லாம எந்த பேப்பரும் , எந்த சேனலும் நியூஸ் போடுறதில்ல , உடனே சம்மந்தபட்டவர் அவரோட பதவிய ராஜினாமா பண்ணிடுவாரு இல்லேன்னா அவர பதவி நீக்கம் செஞ்சுடுவாங்க அதோட அவ்வளவுதான் , சில பெற மட்டும் கைதும் செஞ்சுருகாங்க , எனக்கு தெரிஞ்சு முதன்முதலா அம்பலம் ஆன பெரிய ஊழல் கேத்தன் தேசாய்வோட ஊழல்தான் அம்மாடி எவ்வளவு சொத்து அந்த ஆளுக்கு ,




அடுத்து மாட்டுனது நம்ம ஐபில் தலைவர் லலித் மோடி , அதுலயும் ஏகபட்ட முறைகேடு, விளையாட்டு மேட்டர்ல  விளையாடிட்டார், அடுத்து விளையாடினது நம்ம சுரேஷ் களவானி சாரி சுரேஷ் கள்மாடி, cnbc tv 18 ல அவர Beautiful peoplenu ஒரு ப்ரோக்ராம்ல பேட்டி எடுத்தாங்க common wealth gamesa பத்தி  என்னா அழகா கதை அளந்தான் , மேட்டர் வெளிய வந்ததுக்கு பின்னாடிதான் தெரிஞ்சது அவரு building plana வச்சுதான் அவ்வளவு பேசுனாருன்னு .




அடுத்து மாட்டினது மகராஷ்டிரா சிஎம் அசோக் சவான் , கார்கில் போர்ல நாட்டுக்காக உயிர விட்டவங்க குடும்பத்துக்கு ஒரே ஒரு வீடு அதுலயும் பிராடு ,

       

என்னடா தமிழ் நாட்டுல எதுவுமே நடக்கலைன்னு பார்த்த நடந்துருச்சு நடத்திட்டார் நம்ம மந்திரி ராஜா , ஒரு லட்சத்து எழுபதஞ்சாயிரம் கோடியாம் யாராவது அதுக்கு எத்தன சைபர்னு எனக்கு சொல்லுங்களேன் , அடுத்து latest எல் ஐ சி வீட்டு கடன் வழங்குறதுல முறைகேடுனு பல பெரிய வங்கி அதிகாரிகள கைது பன்னிருகாங்க ... சரி அடுத்த வாரம் என்ன ஊழல்னு பார்போம் .