Friday, September 3, 2010

பொண்ணுங்க பலவிதம்





இங்க பொண்ணுங்கன்னு நான் சொல்லறது , பொதுவான பொண்ணுங்க இல்ல என் வாழ்க்கைல கிராஸ் ஆனா சில பொண்ணுங்க, 


இந்த பொண்ணு பின்னாடியே சுத்துரத பார்த்தா தக்காளி நீ பத்தான் கிளாஸ் பாஸ் பன்னமாட்ட போலன்னு என் நண்பர்கள் எல்லாம் சொல்லுவாங்க , அந்த அளவுக்கு அனிதான்னு ஒரு பொண்ணு பின்னாடி நாய சுத்துனேன் ( ஒரு வேல மனுஷனா சுத்தி இருந்தா லவ் பன்னிருபலோ) நல்லா அழகான பொண்ணு , அவகிட்ட இருக்குற ஒரே கெட்ட பழக்கம் என்னன்னா எதா இருந்தாலும் அவ பாசமலர் அண்ணன் உமதுரைகிட்ட சொல்லிடுவா , அப்படித்தான் நான் அவகிட்ட போய் i love u சொன்னதையும் அவ அண்ணன்கிட்ட போய் சொல்லிட்டா , உமதுரை குத்துனான் பாருங்க உம குத்தா நனைச்சு பார்க்கும்போதே இன்னமும் வலிக்குது.









அடுத்ததா சிந்து இவள பத்தி பெருசா சொல்ல முடியாது சுமாரான பிகர்தான் , ஆனா இந்த சிந்து பின்னாடி சுத்துனதுகே சந்துக்குள்ள வச்சு பின்னிடாய்ங்க ( என்னது மூத்தர சந்தாவ? அதெல்லாம் இல்ல சாதா சந்துதான் )




அடுத்து ரேணுகா நல்லவேளை இவ பின்னாடி என் நண்பன்தான் சுத்துனான், அழகான பொண்ணு அதோட boy friends, brothers இந்த பிரச்சனைலாம் எதுவும் கடையாது, அவன் அவகிட்ட லவ்வ சொல்ல போகும்போது கூட அவளோட friend  சக்தி மட்டும்தான் இருந்தா, பவுடர் போட்ட பன்னி மாதிரி இருக்கா இவளால என்ன பிரச்சனை வரபோதுன்னு நம்பி போய் ரேனுகாகிட்ட லவ்வ சொன்னான் , சக்தி க்கு இவளவு சக்தி இருக்கும்னு தெரியாம போச்சு அவன தள்ளிவிட்டு படுக்க போட்டு சங்குல மிதிச்சுட்டா .. ஒரு வாரம் ஒழுங்கா அவனால பேசக்கூட  முடியல..

இந்த மாதிரி இன்னும் பல கதை இருக்கு , என் வாழ்க்கைல நானும் என் நண்பர்களும் பொண்ணுங்களுக்காக பல தியாகங்கள் செஞ்சும் இன்னும் நாங்க மொட்ட பசங்களத்தான் சுத்திட்டு இருக்கோம் ...  ஆனா மேல சொன்ன பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் ஆகி குடியும் குடித்தனமா இருகாங்க ... இப்போ ஏன் நான் இங்க இந்த பதிவ போட்டேன்னா அப்படி நாங்க சைட் அடிச்ச ஒரு பொண்ணுக்கு அடுத்தவாரம் கல்யாணம் , நேற்றுதான் பத்திரிகை வந்துச்சு ...இதுல என்ன கொடுமைனா அழகான பல பசங்க அவ பின்னாடி சுத்தியும் அவ மடங்கல, கடைசியா இப்போ ஒரு wall clock வாயன கல்யாணம் பண்ணிக்க போறா ...இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியல .. எப்படியோ அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் ...  

8 comments:

  1. வால்க்லாக் வாயன்- சகலையை- sorry-மச்சானை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..!
    இன்னும் எத்தனை பொண்ணுக பல்ப் கொடுக்கப் போகுதோ...
    பார்த்து இருந்துக்குங்க...
    இந்தப் பதிவை தொடரும்-னு போட்டு நாலு புள்ளி வைங்க,
    அப்பத்தான் நச்சுன்னு ஒரு பினிஷிங் இருக்கும்....
    கடைசி கடைசியாய் நல்லதா ஒரு பிகர் கிட்ட மாட்ட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி வெண் புரவி அவர்களே , ஏதோ எங்கள மாதிரி ஆட்களுக்கு arrange marriage னு ஒன்னு இல்லேன்னா கல்யாணமே நடக்காது மட்டும் தெரியுது , அத கண்டு புடிச்சவன் வாழ்க .

    ReplyDelete
  3. எலேய் மக்கா பெரிய ஆளாயிட்ட போலிருக்கு...

    அடப் பாவி அடி வாங்குன கதைய கூட எவ்வளவு பெருமையா சொல்லிகிறாங்க... நீ நடத்து ராசா நடத்து..

    ReplyDelete
  4. ஓட்டு பட்டைய போடு மக்கா.. என்னை போல லேட்டா வர ஆளுக நிறைய பேர் இருக்காங்க...போய் தேடுறது கஷ்டம்..

    சீக்கிரம் ஓட்டு பட்டைய போடு மக்கா...

    ReplyDelete
  5. yenpa ippadi alayaraeenga.udambu punnapovuthu illa.

    ReplyDelete
  6. hehe vaalkaila pala ADIGALAIYUM (aama aama periya sudhandhara poraataa veeran... ) pala DHIDEER THIRUPANGALAYUM (MUTHRA SANDHU) sandhichi, innikum ivalo KETTTHAAAA iruka, pesura nanbare ...

    vaalga .. pallaaandu .. ivalo prachana vaalkaila irundhum porraaaadi merkondu valndhu vara nanbare.. nalla ponnu kidaika vaalthukal...

    paarthu BULB inimel engayum vaangaadheenga plz..
    ALL THE VERY BEST !!!

    ReplyDelete
  7. வணக்கம் மற்றும் நன்றி வெறும் பய மக்கா, கரூர் கிறுக்கன் மற்றும் anonymous, nadathu.

    ReplyDelete