Thursday, September 2, 2010

மாபெரும் பதிவர் சந்திப்பு கூட்டம்




கடந்த செவ்வாய் அன்று காலை 11 மணி அளவில் பதிவர் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது , காலை ஒன்பதரை மணிக்கே பதிவர்கள் வர தொடங்கிருந்தார்கள் , நான் சரியாக 10.15 க்கு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றேன் , எனக்கு முன்பே பதிவர்கள் ராஜா , விஸ்வநாதன் , பிரபாகரன் மற்றும் பலர் வந்து வெட்டியாக பேசியபடியே தம் அடித்து கொண்டிருந்தனர் , நேரம் ஆக ஆக பதிவர்களின் கூட்டம் அதிகமாகிய படியே இருந்தது , கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான பதிவர்கள் வந்திருந்தனர் ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் பதிவர்களின் தலைவன் , எழுச்சி நாயகன் சிவசுப்ரமணியத்தை காணவில்லை , 









தலைவரின் வருகை தாமதத்தால் யாருக்கு லாபமோ இல்லையோ , நம்ம டீ கடை பழனிசாமிக்கு நல்ல வருமானம் , காத்திருந்த நேரத்தில் பதிவர்கள் டீ , பஜ்ஜி , வடை , தம் என வாங்கியபடியே இருந்தனர் , ஒரு வழியாக 11.15 மணியளவில் தலைவர் சிவசுப்ரமணியம் வந்தார் .. ஆள் பார்க்க ஓம குச்சி நரசிம்மனுக்கு முடி இருந்தா எப்படி இருந்துருப்பரோ அந்த மாதிரி சுருக்கமா சொல்லனும்னா கார சேவுக்கு காக்கி சட்டை போட்ட மாதிரி இருந்தார் .... பின்பு கூட்டம் தொடங்கியது அணைத்து பதிவர்களும் வரிசையாக நின்று பதிந்தோம் எங்கள் கல்வி தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ....


படங்கள் : எங்கிருந்தோ சுட்டது .

7 comments:

  1. yarum enaku comments podathathala nane potukiten

    ReplyDelete
  2. உங்களுக்கு கை கொடுக்க யாருமே இல்லை என கவலைப் பட வேண்டாம்...நான் இருக்கிறேன்.. உங்களை பின் தொடரும் முதல் நண்பன் என்ற நிலையில்

    நண்பரே Word Verification எடுத்தால் பலர் பின்னூட்டமிட வசதியாக இருக்கும்... இதனாலையே பலர் தங்கள் கருத்துக்களை கூறாமல் சென்று விட வாய்ப்புண்டு...

    ReplyDelete
  3. நன்றி திரு . வெறும்பய அவர்களே , பெயரில் மட்டும்தான் தாங்கள் வெறும் பய ... ஆனால் உண்மையில் ... வேண்டாம் நான் செண்டிமெண்டா பேசுனா இந்த சமுதாயம் ஒத்துக்காது ... எனக்கு follower ஆகி பெருமைபடுத்தியமைக்கு மிக்க நன்றி ... உங்கள் ஆதரவு என்றும் தேவை ..

    ReplyDelete
  4. என் வீட்டுக்கு கமென்ட் போட்டதுக்கு நன்றி....
    நல்லா எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நன்றி திரு . வெண் புரவி , உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் , முதல் பதிவிலேயே தூள் கிளப்பியிருந்தீர்கள்.

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா நகைச்சுவையோட எழுதறீங்க..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. வாங்க பதிவுலகில் பாபு

    ReplyDelete