Sunday, February 12, 2012

மின்சாரமே கனவு


அடிச்சும் கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதிங்க மாதிரி, 8 மணிநேரம் கரண்ட்ட கட் செஞ்சும் கேட்பாங்க அப்பவும் ஒத்துக்காதிங்கனு உதயகுமார் சொல்லிட்டார் போல , கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்தா மட்டும்தான் கரண்ட் பிரச்சன தீரும் னு மக்களும் பேச ஆரம்பிச்சுட்டாங்க ( என்னது எந்த மக்களா?? எங்க வீட்டு பக்கத்துல மூனு பேர் நேத்து பேசிட்டு இருந்தாங்க அவங்கதான் ) 



காஸ் சிலின்டர் வர 30 நாள் ஆகுதுன்னு கரண்ட் அடுப்பு வாங்குனா கரெக்ட்டா காலைல 6 to 9 கரண்ட் கட் ஆகுது , அதனால முதல் நாள் நைட்டே சமைச்சு மறுநாள் சாப்பிட வேண்டியதா இருக்கு, இப்படி கரண்ட் கட் பத்தி புலம்பும் போதெல்லாம் என் பக்கத்துல நின்னு ஆற்காடு வீராசாமி சிரிக்கிறமாதிரியே  இருக்கு , என்ன எப்படி திட்டுனிங்க இப்ப அனுபவிங்கடா னு சொல்ற மாதிரி இருக்கு , அரவிந்த்சாமி னா மின்சாரகனவு ஆற்காடு வீராசாமி னா மின்சாரமே கனவு னு sms  லாம் அனுப்பி அவர ஒட்டிட்டு இருந்தோம் அப்பகூட 4 மணிநேரம்தான் கரண்ட் போச்சு அதுலயும் எங்க ஏரியால ஞாயிற்று கிழமையும் , பண்டிகை நாள் அப்பவும் கரண்ட் கட் ஆகாது ஆன இப்போ 8 மணிநேரம் கரெக்ட் டா புடுங்குறாங்க .




ஏய் ஆபிஸருங்களா உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ?? மின்சார துறை அதிகாரிங்க யாரும் அடிக்கடி வெளிய வராதிங்க யாராவது ஒன்பதாவது படிக்கிற பசங்க கடுப்புல கத்தி எடுத்து சொரிவிட போறாங்க !

No comments:

Post a Comment