Tuesday, January 25, 2011

அன்புள்ள கருணாநிதிக்கு கண்ணீருடன் எழுதுவது

என்னடா இவன் வழக்கமா மொக்கதான் போடுவான் இன்னிக்கு கருணாநிதி பெயரல்லாம் தலைப்புல இருக்கே ஒரு வேள அரசியல் மேட்டர்தான் எழுத போறானோனு  தப்பா நெனச்சிறாதிங்க, ஆபீஸ் அரசியலே தாங்க முடியாம ராமதாஸ் அய்யா மாதிரி மாறி மாறி கட்சி தாவுர ஆளு நான் , இதுல எங்க தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதுறது , சரி விஷயத்துக்கு வரேன் . 













வீட்ல போர் அடிக்குதுன்னு டிவிய ஆன் பன்னா ஒன்னு இளைஞன்னு ஒரு கிழ... சாரி சாரி நம்ம கலைஞன் வரறாரு சரி வேற சேனல் பார்க்கலாமேன்னு மாத்துனா கலாநிதி மாறன் வழங்கும்னு ஜூம்ல காண்பிச்சு அடிக்கடி கடுபேத்துறாங்க, டிவியே வேணாம்னு சினிமாக்கு போனேன் , தெரியா தனமா பேச்சு துணைக்குகூட ஆள் இல்லாம தனியா போயிட்டேன்,படம் என்னமோ நல்லாத்தான் இருந்துச்சு ஆனா படம் போடுறதுக்கு முன்னாடி ஒரு விளம்பரம் போட்டாங்க பாருங்க அன்புள்ள கலைஞருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு,ஆரம்பிச்சி அஞ்சு நிமிசத்துக்கு மேல ஓடுது , விளம்பரத்துல கொடுக்குற பில்ட் அப்பும் தாங்கல பக்கத்துல பேச்சு துணைக்கும் ஆளில்ல மொத்ததுல வடிவேல் ஸ்டைல்ல சொல்லனும்னா முடியல...







இதுல அந்த விளம்பரத்த இடைவேளைல வேற மறுபடியும் போட்டாங்க .. அய்யா கலைஞர் அவர்களே இதே மாதிரி விளம்பரத்த எப்ப பார்த்தாலும் டிவி , தியேட்டர்னு எல்லா எடத்துலயும் போட்டு என்ன மாதிரி அப்பாவி ரசிகர்கள் எல்லாம் மனம் நொந்து செத்துடோம்னா  அப்புறம் நீங்க கதை வசனம் எழுதுற படத்த பார்க்ககூட ஆள் இருக்க மாட்டோம் ( இப்ப மட்டும் யார் இருக்கா ? ) ஏற்கனவே புதுக்கோட்டை , வேதாரண்யம் பக்கத்துல இலங்கை காரேன் சுட்ரதால உங்க படம் பார்க்க ஆளுங்க குறைஞ்சுகிட்டே வராங்க ( அந்த ஒரு காரணதுக்காகவாது இலங்கை கடற்படை மேல நடவடிக்கை எடுக்க சொல்லுங்க தலைவரே )  நீங்ககூட பாராட்டு விழா , பட்டிமன்றம் , மானாட மயிலாடனு லைவ்வா நடிகர் , நடிகைகள பார்த்துகிறீங்க ஆனா நாங்க ஏதோ டிவி , தியேட்டர்னு தான் பார்க்க வேண்டியது இருக்கு இதுல அங்கயும் நீங்களே வந்தா நாங்க என்ன பண்றது?  சுத்தி சுத்தி உங்களையே பார்க்குறதுக்கு நீங்க என்ன தஞ்சாவூர் பெரிய கோவிலா ? அதனால எதாவது யோசிச்சு செய்ங்க .. 

2 comments:

  1. சுத்தி சுத்தி உங்களையே பார்க்குறதுக்கு நீங்க என்ன தஞ்சாவூர் பெரிய கோவிலா ? அதனால எதாவது யோசிச்சு செய்ங்க ..


    ...good question.... good request....

    ReplyDelete
  2. வாங்க அக்கா, ஆனா இந்த வேண்டுகோள் எங்க தாத்தா காதுல எங்க விழுகபோகுது

    ReplyDelete